Wednesday, August 17, 2016

மலேசிய நாடாளுமன்றத்தில் 2015



சுங்கை புந்தார் தமிழ்ப்பள்ளியைப் பற்றி
மலேசிய நாடாளுமன்றத்தில் அவசரக் கூட்டம்

சுங்கை புந்தார் தமிழ்ப்பள்ளிக்கு ஒரு தற்காலிகத் தோட்டக்காரை நியமிக்க வகை செய்யும் சட்டத்தை இயற்றுவதற்கு மலேசிய நாடாளுமன்றம் உடனடியாக ஓர் அவசரக் கூட்டத்தை நடத்த வேண்டியுள்ளது.



நாடாளுமன்றத்தின் அடுத்த தொடர்க் கூட்டம் இன்று தொடங்குகிறது. ஒரு தமிழ்ப்பள்ளிக்கு ஒரு தற்காலிகத் தோட்டக்காரரை நியமிப்பதற்கான சட்டத்தை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றி பேரரசரின் ஒப்புதலையும் பெற வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு கல்வி அமைச்சின் துணை அமைச்சர் பி. கமலநாதனுடையதாகும்.

கெடா, பீடோங்கிலிருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் சுங்கை புந்தார் தமிழ்ப்பள்ளியில் அட்டைகள், பாம்புகள், பூரான்கள் மற்றும் குரங்கள் அதிகாரம் செலுத்துகின்றன, அவற்றின் அதிகாரத்திற்கு அஞ்சிய மாணவர்கள் அப்பள்ளிக்குச் செல்வதை நிறுத்தி விட்டனர்.

கடந்த (மே 14 2015) வியாழக்கிழமை அப்பள்ளியில் பயிலும் 25 மாணவர்களில் ஒரே ஒரு மாணவர் மட்டுமே வகுப்பிற்கு வந்தார். அடுத்து ஒருவரும் வரப் போவதில்லை என்பது நிச்சயம். அப்பள்ளியின் இந்நிலைக்குக் காரணம் அங்கு தோட்டக்காரர் இல்லாததேயாகும்.

அப்பள்ளி மாணவர்கள் அனுபவித்து வரும் தொல்லைகளைக் களைவதற்கு ஒரு தற்காலிகத் தோட்டக்காரை நியமிக்க வேண்டும் என்று அப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

சுங்கை புந்தார் தமிழ்ப்பள்ளிக்கு ஒரு “தற்காலிக தோட்டக்காரை நியமிக்க சட்டத்தில் இடம் கிடையாது” (மலேசிய நண்பன், மே 17) என்று அவர்களிடம் கூறப் பட்டது. இந்நிலையில், சுங்கை புந்தார் தமிழ்ப்பள்ளிக்கு ஒரு தற்காலிகத் தோட்டக்காரை நியமிக்க வகை செய்யும் சட்டத்தை இயற்றுவதற்கு மலேசிய நாடாளுமன்றம் உடனடியாக ஓர் அவசரக் கூட்டத்தை நடத்த வேண்டியுள்ளது!

நாடாளுமன்றத்தின் அடுத்தத் தொடர்க் கூட்டம் இன்று தொடங்குகிறது. ஒரு தமிழ்ப்பள்ளிக்கு ஒரு தற்காலிக தோட்டக்காரரை நியமிப்பதற்கான சட்டத்தை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றி பேரரசரின் ஒப்புதலையும் பெற வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு கல்வி அமைச்சின் துணை அமைச்சர் பி. கமலநாதனுடையதாகும்.

சுங்கை புந்தார் தமிழ்ப்பள்ளிக்கு ஒரு தற்காலிக தோட்டக்காரரை நியமிக்க சட்டத்தில் இடம் கிடையாது என்று அப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்களிடம் கூறியவர் துணை அமைச்சர் பி. கமலநாதன்.

கடந்த வியாழக்கிழமை அப்பள்ளிக்கு வருகையளித்திருந்த பி. கமலநாதன் இவ்வாறு கூறியதைத் தொடர்ந்து, துணை அமைச்சர் நினைத்தால் தமது சொந்தச் செலவில் ஒரு தற்காலிகத் தோட்டக்காரரை நியமிக்க உதவலாம் என்று ஒரு பெற்றோர் கேட்டுக் கொண்டார்.

துணை அமைச்சரும் பெருந்தன்மையோடு ரிம 500 ஐ கொடுத்தாராம். இதில் இருந்து எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு தற்காலிகத் தோட்டக்காருக்குச் சம்பளம் கொடுக்க முடியும்?  ஆகவே, அரசாங்கம் சம்பளம் கொடுத்து ஒரு தற்காலிகத் தோட்டக்காரரை நியமிக்க வகை செய்யும் சட்டம் இயற்ற வேண்டியுள்ளது.

துணை அமைச்சர் கமலநாதன் அப்பள்ளியைச் சுற்றிப் பார்த்தார். பெற்றோர்களிடம் பேசினார். அவர் பேசிக் கொண்டு இருக்கையில் அப்பள்ளியின் கூரையில் அமர்ந்து கொண்டு ஒரு குரங்கு கூரையைத் தட்டிக் கொண்டு இருந்ததாம். இப்பள்ளியின் நிலை உண்மையில் மிகவும் மோசமாக இருக்கிறது என்றும் அவர் கூறினாராம்.

மேலும் இப்பள்ளியின் மோசமான நிலை குறித்து பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ம.இ.கா.வினர் கெடா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் லியோங்கிடம் முறையிட்டதாகவும் தெரிவித்தனர்.

மே 18, 2015.

No comments:

Post a Comment